பக்தியால் விளைந்த கேடு மத்தியப் பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

1 Min Read

போபால், செப்.28- நாடு முழுவதும் கடந்த 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.

பின்னர் கிராமத்தினர் விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைக்க கொண்டு சென்றனர். குளத்தில் சிலைகளைக் கரைக்கும் போது 7 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் 3 சிறுவர்களை மீட்டனர். எனினும் 3 சிறுமிகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *