இந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள்: அய்.நா. அதிர்ச்சி அறிக்கை

1 Min Read

புதுடில்லி,செப்.28- இந்தியாவில் உள்ள முதியவர்களில் அய்ந்தில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் அதாவது 40 சதவீத்துக்கும் அதிகமான முதியவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என புதிய அய்.நா. அறிக்கை கூறுகிறது. அவர்களின் வேலை, ஓய்வூதியம் மற்றும் வருமான நிலை ஆகியவற்றின் பகுப்பாய்வுபடி 18.7 சதவீத முதியவர்களுக்கு வருமானம் இல்லை என்பதை காட்டுகிறது.

இந்த விகிதம் 17 மாநிலங்களில் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது. உத்தரகாண்டில் 19.3 சதவீதம் முதல் லட்சத்தீவில் 42.4 சதவீதம் வரை உள்ளது. வயதானவர்களிடையே இந்த அளவு வறுமை அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதார நிலையை பாதிக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும் இந்தியாவில் வயதான பெண்களுக்கு அதிக ஆயுட்காலம் இருப்பதாக கூறி உள்ளது. இதனால் வயதான பெண்கள் விதவைகளாகவும், தனியாகவும், சொந்தமாக வருமானம் இல்லாமலும் குடும்பத்தையே முழுமையாக சார்ந்து வாழும் நிலையில் உள்ளனர். இதனால் இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வு கவலை அளிப்பதாக அறிக்கை கூறி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *