வடமணப்பாக்கத்தில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள்

viduthalai
1 Min Read

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் வேல்.சோ.நெடுமாறன்

வடமணப்பாக்கம், மார்ச் 14- திருவண் ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன் னிட்டு 10.3.2024 அன்று காலை 8 மணியளவில் தந்தை பெரியார் சிலைக்கு மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடு மாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் மருத்துவர் வேல்.சோ.நெ.பரத் குரு, மாவட்ட திராவிடர் கழக செயலா ளர் பொன்.சுந்தர், பகுத்தறிவாளர் கழகம் வி.வெங்கட்ராமன், முனைவர் மு.தமிழ்மொழி, கிளைக் கழக தலைவர் மு.வெங்கடேசன், பெரியார் பிஞ்சுகள் தே.அன்புச்செழியன், தே.கயல்விழி, மு.ஆறுமுகம், சி.கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்யாறு பெரியார் பெருந் தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு வட மணப்பாக்கம் பெரியார் சிலை புனர மைப்பிற்கு பொறியாளர் வேல்.சோ.நெடு மாறன் ரூ.10,000த்தை மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் அவர்களிடம் வழங் கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *