இடைநிலை ஆசிரியர் தேர்வு இணையதளம் மூலம் மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம்

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 14 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024-ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங் களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01/2024, நாள் 09.02.2024 அன்று வெளியிடப் பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விண்ணப்பதா ரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங் களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024-லிருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப் பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண் ணப்பித்து கட்டணம் செலுத்திய வர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும் பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *