சிறீரங்கத்தில் சிலை நகர்த்தி வைக்கப்பட்டதாம் பக்தர்கள் திடீர் போர்க் கொடியாம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிறீரங்கம், மார்ச்.13- சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக் தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்த்தி வைக்கப்பட்ட சிலை
சிறீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை யானதாக கூறப்படும் இச் சிலை முன்பு கொடியேற்றும் மண்டபத் தின் மீது இருந்தது. கடந்த
2015-ஆம் ஆண்டு கோவில் நிர் வாகத்தால் அந்த சிலை சற்று நகர்த்தி வைக்கப் பட்டது. இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அந்த சிலையை ஏற்கெனவே இருந்த இடத்தி லேயே மீண்டும் அமைக்க வேண்டும். மூலவர் ரெங்கநாதர் திருவடியை முன்பிருந்த மாதிரியே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த் தையில், குழு அமைத்து தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

போராட்டம்
ஆனால் பேச்சுவார்த்தை நடத்தி 6 மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததை கண்டித்தும், மேற்கண்ட கோரிக் கைகளை நிறை வேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்று கூறியும் சிறீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர் போராட் டம் நடத் தினர். இதில் அவர்கள், ஒருங்கி ணைப்பாளர் சீனிவாசன் தலைமை யில் ஜால்ரா சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கோரிக்கைகளை மனுவாக வழங்கினால், அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் அன்பு உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கை விட்டு, கலைந்து சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *