பெண் காவலர்களுக்கு ஒரு மாத இலவச மேமோகிராம் பரிசோதனை

1 Min Read

சென்னை, மார்ச் 13- மார்ச் 8ஆம் தேதி ஆண்டுதோறும் பன்னாட்டு மகளிர் நாள் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னையில் உள்ள முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனை சென்னை மாநகர பெண் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் களுக்காக பிரத்யேகமாக ஒரு மாத கால இலவச மேமோகிராம் மற்றும் மார்பக ஆலோசனை முகாமை நடத்துகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம், மார்பக புற்றுநோய் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிப்பதும், விழிப் புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.

கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் இந்த முகாம் பிரசாந்த் மருத்துவமனைகள் மற்றும் பிரசாந்த் கருத்தரிப்பு ஆராய்ச்சி மய்யத் தலைவர் கீதா அரிப்பிரியா, பிரசாந்த் மருத்துவ மனைகள் இயக்குநர் டாக்டர் சம்ஹிதா மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *