கும்மிடிப்பூண்டி மாவட்டம் சோழவரத்தில் தெருமுனைக் கூட்டம்

viduthalai
2 Min Read

சோழவரம், மார்ச் 12- கும் மிடிப்பூண்டி மாவட்டம் சோழவரத்தில் இளைஞ ரணி சார்பில் “இந்தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?” என்ற தலைப் பில் 5.3.2024 மாலை 6 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கும் மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்கர வர்த்தி தலைமை வகித் தார். பொதுக்குழு உறுப் பினர், சோழவரம் ஒன் றிய தலைவர் ந.கசேந்தி ரன் வரவேற்புரை ஆற்றி னார். தொடக்கவுரையாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் மிகச் சிறப்பான முறையில் பா.ஜ.க.வின் பொய்ப் பித்தலாட்டங் களை எடுத்துக் கூறினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் மற்றும் கும்மி டிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல்.த. ஆனந் தன் கருத்துரை வழங்கினர்.
கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பா ளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், “இந்தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?” என்கிற தலைப் பில் பாசிச பாஜகவின் அராஜகங்களை, பொய் பித்தலாட்டங்களை தோலு ரித்துக் காட்டினார்.
இறுதியாக மாவட்ட இளைஞரணி செயலா ளர் அ.ஆகாஷ் நன்றி கூறினார்.

தி.மு.க. பேச்சாளர் செங்குன்றம் ஏ.திராவிட மணி, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சோழவரம் ஒன்றியச் செயலாளர் (தெ) ஆத்தூர் தே.காந்தி, மக்கள் உரிமை பாது காப்பு கழகத்தின் மாவட்ட செயலாளர் சோழவரம் ரமேசு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஓவியர் ஜனாதிபதி, புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார், புழல் நகர தலைவர் சோமு, புழல் நகர செயலாளர் க.ச.க. இரணியன், பொன் னேரி நகர தலைவர் வே.அருள், பொன்னேரி நகர செயலாளர் மு.சுதா கர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன், பொன்னேரி இளைஞ ரணி தலைவர் சு.எழில், பொன்னேரி இளைஞ ரணி செயலாளர் க.சுகன் ராஜ், மீஞ்சூர் பழனி, பெரியபாளையம் கலை வேந்தன், தி.மு.க.சோழ வரம் கிளைச் செயலாளர் சிவா, தி.மு.க வழக்குரை ஞர் அணித் தலைவர் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *