பாடுபட்டு உழைக்கக்கூடிய நம்மைக் கீழ் ஜாதி என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் திருடவில்லை; கொள்ளையடிக்கவில்லை; யாரையும் மோசம் செய்யவில்லை. இப்படிப்பட்ட மக்களைச் சட்டப்படி – சாத்திரப்படி சூத்திரர்கள், நாலாம் ஜாதி, அய்தாம் ஜாதி என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். இதுபற்றி நம் மக்கள் மானமோ, ஈனமோ இல்லாதவர்கள் போல் கவலையற்று இருக்கலாமா? போதாக்குறைக்கு நம் இனத் துரோகிகளும் பார்ப்பனருக்குத் துணை போகிறார்கள். இழிவை ஒழிக்க நம் மக்கள் முன் வர வேண்டாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1264)

Leave a Comment