மின்னஞ்சலில் பிணை உத்தரவிட்டும் 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி

1 Min Read

குஜராத் சிறைத்துறைக்கு 

ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

காந்திநகர்,செப்.29- குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்ஜி தாக்கூர். 27 வயது இளைஞரான இவர் 2020 கொலைக் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஆண்டுதான் கரோனா தொற்று பரவியதால் வழக்கு கள் அனைத்தும் ஆன்லைனின் நடைபெற்று வந்தது.

இதனால் அவரது பிணை மனு மீதான விசாரணையும் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. பின்னர் இவருக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டு, அந்த உத்தரவுகளைச் சிறை நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளது. 

ஆனால் இந்த மின்னஞ்சலைச் சிறை அதிகாரிகள் திறந்து பார்க்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தன்ஜி தாக்கூர் பிணை கிடைத்தும் மூன்றாண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவர் மீண்டும் பிணை  கேட்டு முறையிட்டபோதுதான், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா மற்றும் எம்.ஆர்.மெங்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, பிணை கிடைத்தும் 3 வருடங்கள் சிறையிலிருந்த குற்றவாளிக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தர விட்டனர். மேலும் இந்த இழப்பீட்டை 15 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *