ஒன்றிய ஆட்சியில் மாற்றம் வருவதற்கு இந்தியா கூட்டணியை பெண்கள் ஆதரிக்க வேண்டும் – சி.பி.அய். இரா.முத்தரசன் பேட்டி

1 Min Read

கோபி, மார்ச் 10- ஈரோடு மாவட்டம் கோபியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
தற்போது ஒன்றியத்தில் ஆட் சியில் இருக்கும் அரசு பெண் களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனவே ஒன் றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைத்து பெண்களும் ‘இந்தியா’ கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
இயற்கை பேரிடர்களால் பெரும் பாதிப்புக்குள்ளான போது தமிழ்நாடு வராத பிர தமர் நரேந்திர மோடி, தற்போது அடிக்கடி வருகிறார்.
தமிழர்களின் வாக்குகளை நயவஞ்சகமாக பெற்றுவிட வேண்டும் என்று தனக்கே உரிய பாணியை பயன்படுத்தி திரும்ப திரும்ப வந்துகொண்டு இருக் கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் ஏமாளி கள் இல்லை. அவரை நிச்சயமாக நிராகரிப்பார்கள். வருகிற நாடா ளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்கள் கூட் டணி வெற்றி பெறும்.
நாட்டு மக்கள் நிச்சயமாக மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே ‘இந்தியா’ கூட்டணியை வருகிற நாடாளுமன்ற தேர்த லில் வெற்றி பெற செய்வார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை, அவர்களோடு யார் வருகிறார்களோ? சேர்த்துக் கொண்டு போட்டியிடுவார்கள். ஆனால் அவர்களால் பெரிய விளைவை ஏற்படுத்த முடியாது. அதேபோல் பா.ஜனதாவுடனும் யாரும் விரும்பி கூட்டணி சேர் வதில்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *