திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்பு

1 Min Read

ஈரோடு,செப்.29 உலகப் பொது மறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில், தமிழ்நாடு அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1,330 திருக் குறள்களை ஒப்புவிக்கும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசாக தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகிறது. அதன்படி இந்த நிதி ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,330 குறட்பாக்களையும் ஒப்பு விக்கும் திறன்கொண்ட மாணவ-மாணவிகள் திருக்குறள் முற்றோதல் விண்ணப்பத்தினை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தினை வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இந்த தகவலை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *