தாம்பரத்தில் நடைபெற்ற தொழிலாளரணி கலந்துரையாடல்

viduthalai
2 Min Read

தாம்பரம், மார்ச் 9- தாம்பரம் தந்தை பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 6.3.2024 அன்று மாலை 6 மணிய ளவில் தாம்பரம், சோழிங்கநல் லூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, ஆகிய மாவட்டங்களின் திராவிட தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் நடைபெற்றது.

தொழிலாளரணி மாநில தலை வர் திருச்சி மு.சேகர் தலைமையில் முன்னிலை தலைமை கழக அமைப் பாளர் வி.பன்னீர் செல்வம்,பேரவை தலைவர் கருப்பட்டி சிவா, தாம் பரம் மாவட்ட தலைவர் ப.முத்தை யன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, தாம்ப ரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் மா.குணசேகரன், திருவள்ளூர் மாவட்ட தொழிலா ளரணி தலைவர் கி.ஏழுமலை, ஆர்.அசோக் குமார், அ.ப.நிர்மலா, எஸ்.ஆர்.வெங்கடேஷ், சண்.சர வணன், ந.கதிரவன், தாம்பரம் மாநகர இளைஞரணி செயலாளர் ச.ச.நரேஷ் (எ)அழகிரி,தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், அ.கருப்பைய்யா, வெ.கதிர்வேல், நா.முருகன், சே.சந்திரசேகரன், இளங்கோவன், பெ.அனுசயா.
இந்த கூட்டத்தில் தொழிலாளி களுக்காக தமிழ் நாடு அரசு வித்திட்டுள்ள நல திட்டங்கள் பற்றியும் அதில் மக்களை எப்படி இணைத்து அவர்களை பயன்பெற செய்வது என்பதை பற்றியும் கழக தோழர்களுக்கு தலைவர் மு.சேகர் விரிவாக எடுத்துரைத்தார்கள். இந்த திட்டங்கள் குறித்தான கேள் விகளை கழக தோழர்கள் கேட்க தலைவர் சேகர் விளக்கி கூறினார்.
இக்கூட்டத்தில் தோழர்களின் பலத்த கைத் தட்டலுக்கு இடையே கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

தமிழ் நாடு பெரியார் கட்டு மானம் அமைப்பு சாரா தொழிலா ளர் நலச்சங்கத்திற்கான உறுப்பி னர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாவட்ட தொழிலாள ரணி தலைவர் மா.குணசேகரனை மாவட்ட தலைவராக நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தாம்பரம் பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் உறுப்பினர் ஆக்குவது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 10 அன்னையார் பிறந்த தினத்தை சிற்ப்பாக கொண்டா டுவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *