கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
1 Min Read

திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் அணி கலந்துரையாடல்

10.03.2024 அன்று காலை 10.00 மணியளவில் திராவிட தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர் கழகத் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருவாரூரில் மணியம்மையார் பிறந்த நாள் விழா

அன்னை மணியம்மையார் பிறந்த நாளான 10.3.2024 காலை 10 மணிக்கு திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மையார் படத்துக்கு மாவட்ட கழக தலைவர் வீ.மோகன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
-சவு.சுரேஷ், மாவட்ட செயலாளர், திருவாரூர்.

ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்தநாள் மார்ச் 10 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் அம்மாவின் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்படுகிறது.
காலை சரியாக 9 மணிக்கு அனைத்து தோழர்களும் தவறாமல் வருமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவும்.- இப்படிக்கு
மா.மணிமாறன், ஈரோடு மாவட்ட செயலாளர்

வேலூர்: குடும்ப விழா

நாள்: 10.4.2024 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி, இடம்: குடியாத்தம்: வேலூர் மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மார்ச் 10: அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் மற்றும் மார்ச் 8: உலக மகளிர் தினம் குடும்ப விழா.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *