மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் ஜாதியை விட்டு – ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.