திராவிடர் கழகத்தின் சோர்விலா தொடர்பணி

viduthalai
1 Min Read

“நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதி முறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் திராவிடர் கழகம் தயாராகவுள்ளது. திராவிடர் கழகம் சென்ற ஆண்டு நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்து, சுமார் 3,000- த்துக்கும் மேற்பட்ட கழகத்தினர் பலவித கடுங்காவல் தண்டனை அடைந்து சிறை சென்றனர். இன்னும் பலர் சிறையில் வாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். 15 தோழர்களுக்கு மேல் சிறைக்கு உள்ளும் வெளியிலும் பிணமாக ஆகியிருக்கின்றனர்.

இதனால் நாம் சலிப்போ, மனச் சோர்வோ அடைந்து விடவில்லை. சுயநலம் அற்ற உண்மைத் தொண்டர்களுக்கு ஒருபோதும் சோர்வு மனப்பான்மை ஏற்படாது.
இதற்கு அறிகுறியாக. அடுத்து நடக்க இருக்கும் “சுதந்திரத் தனித் தமிழ்நாடு ” போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் ஈடுபட முன்வரவேண்டும். இதற்குத் தயங்கப் போவதில்லை.”

(பாபநாசம் தாலுகா, கோவிந்தக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய உரை) – ‘விடுதலை’ 15.06.1959

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *