அம்மாவின் கண்டிப்பான கவனிப்பு

1 Min Read

அய்யாவை எவ்வளவு பொறுப்பாக அம்மா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்பதற்கு ‘வடமேற்குடியான்’ என்பவர் 1974இல் ‘உண்மை’ ஏட்டில் எழுதியுள்ள இந்தத் தகவல்கள் சான்றாகின்றன.

“சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவாரூர் பொதுக் கூட்டத்திற்குப் பெரியார் வந்திருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. வயிற்றுக் கோளாறு. இதையறியாத நண்பர்கள் உப்புமா தருகிறார்கள். பெரியாரும் வேண்டாமெனச் சொல்ல மனமின்றி அள்ளி வாயில் போடுகிறார். அதைப் பார்த்துவிட்டு மணியம்மையார் ஓடிவந்து வாயில் போட்டதைத் துப்பும்படி கெஞ்சுகிறார். அய்யா குழந்தையைப் போல் அடம் பிடிக்கிறார். அம்மா தாய் போல் கடிந்து கொள்கிறார். அவர் துப்பும் வரை விடவில்லை. பிறகு மருத்துவர் சொன்னபடி சூடான பானம் கொண்டு வந்து கொடுக்கிறார்.”

இது போலப் பெரியாரைக் கண்காணித்து வந்த அன்னையார் கழகத் தொண்டர்கள், அய்யாவை எவ்வாறு ‘அய்யா’ என்றோ ‘தந்தை பெரியார்’ என்றோ குறிப்பிடுகிறார்களோ அதுபோலவே அம்மாவும் அய்யா அவர்கள், பெரியார் அவர்கள் என்றே குறிப்பிட்டார். என் கணவர் என்று எப்போதாயினும் தவிர்க்கவியலாத சூழ்நிலையில் தான் குறிப்பிட்டிருப்பார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *