உசிலம்பட்டி, மார்ச் 8- உசிலம் பட்டி மாவட்ட திராவி டர் கழகத்தின் சார்பில், 5.3.2024 அன்று மாலை, சோழவந்தான் அருகில் உள்ள கருப்பட்டி கிரா மத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா” மற்றும் “இந் திய கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்?” என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில பேரவை தலைவர் கா. சிவகுருநாதன் தலைமை ஏற்றார். உசிலம்பட்டி மாவட்ட செயலாளர் பா. முத்துக்கருப்பன் வர வேற்புரையாற்றினார். மாவட்ட காப்பாளர் சுப.தனபாலன் முன் னிலை ஏற்றார். கருத்து ரையாக உசிலம்பட்டி மாவட்ட தலைவர் த. ம. எரிமலை, மாநில வழக் குரைஞரணி துணை செயலாளர் நா. கணேசன், தலைமை கழக அமைப் பாளர் வே. செல்வம், உசிலம்பட்டி மாவட்ட துணை செயலாளர் துணை சந்திரன், உசிலம்பட்டி மாவட்ட கழக அமைப் பாளர் ரோ.கணேசன், உசிலம் பட்டி மாவட்ட மகளி ரணி செயலாளர் இரா.கலைச்செல்வி, மேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ. பாக்கிய லட்சுமி, மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ. பாலா ஆகியோர் கருத்துரையற்றினர்.
இப்பொதுக் கூட்டத் தில் கழக சொற்பொழி வாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வம் சிறப் புரை ஆற்றினார்.
சோழவந்தான் நகர தலைவர் கா.தங்கராசு, சோழவந்தான் ஒன்றியம் சின்னத்தம்பி, மாநகர் மாவட்டம் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் அ. மன்னர்மன்னன், உசி லம்பட்டி மாணவர் கழ கத் பா. தலைவர் வெங்க டேசஷ் மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்க ளும், தோழர்களும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.