மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 10ஆம் தேதி நேர்காணல் தி.மு.க. அறிவிப்பு

1 Min Read

சென்னை, மார்ச் 8- மக்களவை தேர் தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர் களுடன் வரும் 10ம் தேதி திமுக தலை வரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்த உள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது;

“நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 10-3-2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார். இந்நேர்காண லின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக் கான ஆதரவாளர்களையோ – பரிந்துரை யா ளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர் காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.” -இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *