சிவகங்கையில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்

viduthalai
1 Min Read

சிவகங்கை, மார்ச் 6- 4.3.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திரா விடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புக ழேந்தியின் Ôயாழகம்Õ இல் லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திரா விடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி மு.சேகரும், திரா விட தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி கா. சிவாவும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி தலைமை உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் ச.அனந்த வேல் முன்னிலை வகித் தனர். கூட்டத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர்கள் அழகு, செல்வி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இறுதியில் பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் செயராமன் நன்றி உரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *