நன்கொடை

1 Min Read

திராவிடத்தின் விடிவெள்ளி திராவிட மாடல் ஆட்சி திராவிடம் வெல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளை (1.3.2024) முன்னிட்டு முற்றுப் புள்ளி இல்லா நல்லாட்சி நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் தனது 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாகவும் ரூ.500 நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு வை.நடராசன் நன்கொடை அளித்தார்.

– – – – –

புதுக்கோட்டை ஏனாதி கிராமம் பழனியின்
18ஆம் ஆண்டு நினைவு கூர்ந்தும் மற்றும் பெரியார் பிஞ்சு மு.கா.இளஞ்செழியனின் 9ஆவது பிறந்த நாள் (4.3.2022) மகிழ்வாகவும் பழ. நல்லம்மாள், பழ.நல்.முத்துக்குமார்,
மு. கார்த்திகா, பழ.நல். நாகராசு, நா.செண்பகம், பழ.நல். வெற்றிவேல், நா.செ.அன்பு செழியன், மு.கா. இளம்கவி, நா.செ. கயல் கவி ஆகியோர் சார்பாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,500 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி.

– – – – –

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், இராயத்த மங்கலம் கிராமத்தில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் ரெ.இராமசாமி – ரா.பரிபூரணம் ஆகியோரின் இளைய மகன் இரா.பிரபாகரன் – பி.மஞ்சு இணையருக்கு இன்று (5.3.2024) காலை 9.46 மணிக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *