பெரியார் பெருந்தொண்டர் திருவேங்கடம் 27 ஆவது நினைவு நாள்

1 Min Read

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி கேதாரிமங்கலம் திருவேங்கடம் அவர்களின் 27 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நேற்று (3.3.2024) காலை 10 மணி அளவில் கேதாரிமங்கலத்தில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவரது நினைவிடத்தில் நாகை மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப் பட்டது.
நிகழ்வில் திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, நாகை மாவட்ட துணைத்தலைவர் பொன்.செல்வராசு, திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, நாகை ஒன்றிய செயலாளர் குஞ்சுபாபு, சின்னதுரை ஆகி யோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர் நிகழ்வில் இளைஞரணி தோழர் இளையராஜா திருவேங்கடம் அவர்களின் புதல் வர்கள் குணசேகரன், வீரமணி,இளங்கோவன், தி.மு.கழகத் தைச் சார்ந்த ராம்கி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதி யாக திருவேங்கடம் அவர்களின் புதல்வர் எஸ்.திருவேங்கட ரவி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *