ராமேசுவரத்தில் தொழிலாளர் அணி கலந்துரையாடல்

1 Min Read

திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி. மு.சேகர், தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் கருப்பட்டி.கா.சிவா ஆகியோரது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வு 3-3 – 2024 காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் உதயா தங்குமனையில் திராவிடர் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்கி தொழி லாளர் நல ஆணையத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக பெற்றுத் தரவும் ஏற்கனவே, பதிவு செய்து புதுப்பிக்காத நபர்களின் உறுப்பினர் அட்டைகளை புதுப்பித்து தருவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. அதேபோல ராமேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளிலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங் கத்தை நிறுவிட ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *