கல்லக்குறிச்சி ஒன்றிய கழக தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புலவர் பெரியார்நேசனின் படத்திறப்பு 3.3.2024 ஞாயிறு காலை 11 மணியளவில் கல்லக்குறிச்சி ஏ.எல்.சி. கூட்டரங்கில் கல்லக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளருமான சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில், திமுக மேனாள் நகர மன்ற துணைத்தலைவர் கலைச்செல்வன் வரவேற்பில், கல்லக்குறிச்சி மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் ச.சுந்தரராசன், மாநில கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் இளங்கோ, டாக்டர் உதயகுமார், புலவர் ஆராவமுதன் ஆகியோர் முன்னிலையில் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் படத்தை திறந்து வைத்து இரங்கலுரையாற்றியும் மற்றும் மாவட்ட கழக, ப.க., திமுக பொறுப்பாளர்கள் நினைவேந்தல் உரையாற்றியும், ஆசிரியர் கென்னடி நன்றி கூறியும் மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.