நிலவில் பிரக்யான் ரோவர் எதிர்பார்த்தபடி பணிகளை செய்துவிட்டது இஸ்ரோ தலைவர் சோம்நாத்

1 Min Read

அகமதாபாத், அக்.1 குஜராத் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ‘எக்ஸ்-ரே போலாரிமீட்டர்’ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருவதாக தெரிவித்தார்.

தற்போது நிலவில் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரக்யான் ரோவர் குறித்து அவர் கூறுகையில், “நிலவில் இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும். இதன் காரணமாக ரோவரின் மின்னணு பாகங்கள் சேதமடையவில்லை என்றால் அது மீண்டும் விழித்துக்கொள்ளும்.இருப்பினும் பிரக்யான் ரோவர் நிலவில் எதிர்பார்த்தபடி தனது பணிகளை சிறப்பாக செய்துவிட்டது. எனவே அது மீண்டும் விழிக்கவில்லை என்றாலும் பிரச்சினை இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *