திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

1 Min Read

திருச்சி, மார்ச் 4- திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நேற்று (3.3.2024) காலை 7.30 மணியளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை துவக்கி வைத்து சிறப்பித்தார். மருத்துவர் சீனிவாசன், பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனை வர் கோ. கிருஷ்ணமூர்த்தி, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பேரா. ஏ. ஜெசிமா பேகம் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இம்முகாமில் திருச்சி சுந் தர் நகர், கலைஞர் கருணாநிதி மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதியிலுள்ள 218 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சுப்ரமணி யபுரம் அரசு ஆரம்ப சுகா தார மய்யம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட் டக் குழுவினர், பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மஞ்சுளா வாணி மற்றும் செவிலியப் பணியாளர்கள் மிகவும் சிறப்பாக செய் திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *