தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

அரசியல்

தருமபுரி, அக். 1- தருமபுரி மாவட்ட நிம்மாங்கரை கிராமத்தில் கழக இளை ஞரணி சார்பில் மா.செல் லதுரை (மாநில இளைஞ ரணி துணை செயலாளர்) தலைமையில் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா நிகழ்வு 17-.9.-2023 அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

இந்நிகழ்வில் நி.சி. மாதேஸ் கிராம நிர்வாக அலுவலர் தோழர்க ளுக்கு இயக்க ஏடுகளை வழங்கியும், மற்றும் தலை மையாசிரியர் மா.சின்ன மாது தோழர்களுக்கு இனிப்புகளை வழங்கி யும், தோழர் வில்கிருஷ் ணன் எழுச்சியான முறை யில் தந்தை பெரியாருக்கு முழக்கங்களை எழுப்பி யும் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கிராமத்திலுள்ள பொது மக்களும், பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவர் களும், மகளிர் தோழர்கள் மற்றும் பொது மக்களும்  பெருந்திரளாக கலந் துக் கொண்டு பிறந்தநாளை யொட்டி சமூக நீதியின் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *