ஓய்வு பெற்ற இஎஸ்அய் காப்பீடுதாரர்களுக்கும் மருத்துவப் பலன்கள் நீட்டிப்பு

1 Min Read

இஎஸ்அய் கார்ப்பரேஷனின் 193ஆவது கூட்டம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மருத்துவ உதவிகளை மீட்பது குறித்து விவாதித்தது.
இஎஸ்அய் காப்பீடுதாரராகவே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இப்போது மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 21 ஆயிரம் ரூபாய்வரை ஊதியம் பெறுபவர் மட்டுமே இஎஸ்அய் காப்பீடுதாரராக இருக்க முடியும்.
அந்த உச்சவரம்பைத் தாண்டி ஊதியம் உயர்ந்ததால், திட்டத்திலிருந்து விடுபட்டு, அதன் பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
1.4.2012க்குப் பிறகு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஎஸ்அய் காப்பீடு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
1.4.2017 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு – விருப்ப ஓய்வு பெற்று இருக்க வேண்டும்.
ஓய்வு பெறும் போது ரூபாய் 30 ஆயிரத்துக்கு மேற்படாமல் ஊதியம் பெற்றிருக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *