ஈரோடு தமிழன்பன் 90ஆவது பிறந்தநாள் விழா

1 Min Read

அரசியல்

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா 28.9. 2023ஆம் நாள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னைக் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கவிஞரின் 83 நூல்கள் கொண்ட பெருந்தொகுப்பு “எரிதழலும் இளங்காற்றும்” என்னும் 1730 பக்கங்கள் கொண்ட ஒரே நூலாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர் ய.மணிகண்டன், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கவிஞரின் துணைவியார் சாந்தகுமாரி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், நீதியரசர் ச. ஜெகதீசன், ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ், அமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, புதுவை அமிர்த கணேசன், கவிஞர் கவிமுகில் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *