பிஜேபி ஆட்சியை விரட்டும் இரண்டாவது சுதந்திரப் போர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,பிப்.29 இலங்கை கடற் படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக் கப்படுவது, கைது செய்யப் படுவதை தடுக்க ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வில்லை என்று கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று (28.2.2024) கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய தாவது: பாஜக சார்பில் 2013-ஆம் ஆண்டு நடந்த கடல் தாமரை மாநாட்டில் பங்கேற்ற சுஷ்மாஸ் வராஜ், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைப்போம். மீனவர்கள் பாது காப்புக்காக கடற் படையை எல்லை யில் நிறுத்துவோம். படகுகள் பறி முதல் செய்யப்படாது. மீனவர்களின் உயிருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்போம்’’ என்றார்.

அப்படி கூறித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான மீன வர்கள் கொல்லப்பட்டனர். ஏராள மான படகுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற் றுவதிலும், மீனவர்களை நசுக்குவ திலும் முதன்மையாக பாஜக உள்ளது. மக்கள் விரோத பாஜக ஆட்சியை தூக்கி எறியும் 2-வது சுதந்திர போராட் டத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் இறங்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் மாநில தலைவர் கே.வீ .தங்கபாலு, அசன் மவு லானா எம் எல்ஏ, துணை தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *