100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நிதிவழங்க மறுப்பதாககூறி திரிணாமுல் காங்கிரஸ் டில்லியில் போராட்டம்

1 Min Read

அரசியல்

புதுடில்லி, அக். 3 – மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிதியை விடுவிக்கக் கோரி கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியார் நினை விடத்தில் நேற்று (2.10.2023) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

காந்தியாரின் பிறந்த தினத் தன்று அவரது நினைவிடத்தில் நடந்த இந்த போராட்டம் டில் லியில் பரபரப்பை ஏற்படுத் தியது.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரசின் இந்த குற்றச் சாட் டுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்து உள்ளார். 

மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 25 லட்சம் போலி அட்டைகள் இருப்ப தாக குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த ஊழல் தொடர்பாக சி.பி.அய். விசார ணைக்கு பரிசீலித்து வருவதாக கூறி யுள்ளார். 

மேற்கு வங்காள அரசு மற் றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய நிதியில் பெரிய அளவில் முறைகேடு களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *