24.02.2023 அன்று தென்காசி கழக மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தென்காசி மாவட்ட மகளிரணி – மகளிர் பாசறை தோழர்களிடம் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்துரையாடினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றியடைய செய்ய மகளிர் பிரச்சாரம் அதிமுக்கியம் என்பதை பதிவு செய்தார். கீழப்பாவூர், மேலமெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து மகளிர் அதிகம் கலந்துகொண்டனர்.