மாநகர போக்குவரத்துக் கழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

1 Min Read

சென்னை, பிப். 28- மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவிபத்தை ஏற்படுத்தாமல் பணி புரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பரிசு,பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 26.2.2024 அன்று வழங்கினார்.

மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகர போக்குவரத்துக் கழகத்தில், கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தில் லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் விபத்தில்லா மல் பணிபுரிந்த ஓர்ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநருடன் கூடிய நடத்துநர்களுக்கு வெள்ளிநாணயப் பரிசு மற்றும் பாராட்டுசான்றிதழ்களையும் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *