சென்னை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி அளிக்கும் நிதி எவ்வளவு-அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

1 Min Read

சென்னை, நவ. 22- சென்னை பல் கலைக்கழகத்தின் எந்தெந்த ஆராய்ச்சி திட்டங்களுக்குப் பல் கலைக்கழக மானியக் குழுவின் நிதி பெறப்படுகிறது என விளக்கம் அளிக்கத் தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தேர்வு செய்வ தற்காக, தேடுதல் குழுவை நிய மித்து, தமிழ்நாடு அரசு செப்டம்பர் 13ஆம் தேதி அரசாணை பிறப்பிக் கப்பட்டது. இந்த குழுவினர், மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழக வேந்தரான ஆளு நருக்கு அறிக்கை அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது. இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் ஜெகன்னாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசார ணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள தைச் சுட்டிக்காட்டிய தலைமை வழக்குரைஞர் சண்முக சுந்தரம், வேந்தர் பதவி வகிப்பவரை மாற்ற இருப்பதாகவும், எந்தெந்த திட் டங்களுக்கு யுஜிசி நிதி உதவி பெறப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டுமெனக் கோரிக்கை வைக் கப்பட்டது. 

துணை வேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பது பற்றிய இந்த வழக்கில், வேந்தர் பதவி குறித்து தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை டிசம்பர் 18க்கு தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *