செய்தியும், சிந்தனையும்….!

1 Min Read

மனுதர்ம புத்திதானே…?
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்கள் இல்லாத காரணத்தால், பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் ஈ.டி., அய்.டி., நடவடிக்கை எடுக்கவில்லை.
‘துக்ளக்’, 6.3.2024
>> பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறியிருக்கிறதே, அது ஊழல் இல்லையா? ‘ஒரு குலத்துக்கொரு நீதி’ என்கின்ற மனுதர்ம புத்திதானே இதற்குக் காரணம்.
தெரிவிக்கவில்லையே!
* தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.,க்களை அனுப்புவது உறுதி.
– தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை
>> தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.,க்கள் போவது உறுதிதான். ஆனால், எந்தக் கட்சியிலிருந்து என் பதை அண்ணாமலை தெரிவிக்கவில்லையே!
கேட்டிருக்கலாமே!
* மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்ன?
– உயர்நீதிமன்றம் கேள்வி
>> அரசு இடங்களிலும், பொது இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோவில்கள்மீது எடுக்கப்படும் நட வடிக்கை என்ன? என்ற கேள்வியையும் கேட்டிருக் கலாமே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *