கீழடி அகழாய்வு அறிக்கை 9 மாதங்களுக்குள் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

மதுரை, பிப்.27 கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக் கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
‘சிவகங்கை மாவட்டம் கீழ டியில் 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசு சார்பில் தொல் லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வுப் பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.

இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் சிறீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப் பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3ஆ-ம் கட்ட அகழாய்வில் குறிப் பிடும்படியான கண்டுபிடிப் புகள் இல்லை.

முதல் 2 கட்ட கீழடி அக ழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.
கீழடியில் கிடைத்த பொருட் களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டு களுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.

கீழடியில் தற்போது 4 முதல் 9ஆம் கட்ட அகழாய்வு பணி களை மாநில அரசு மேற் கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட் டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை.

982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடி வுகள் கிடைக்கும். எனவே கீழடி யில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி இளங் கோவன் முன்பு நேற்று (26.2.2024) விசாரணைக்கு வந் தது. ஒன்றிய அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், ”கீழடியில் ஒன்றிய அரசு மேற்கொண்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 9 மாதங் களில் அறிக்கை வெளியிடப் படும்” என்றார்.
இதையடுத்து ”கீழடி அகழாய்வு அறிக்கைகளை ஒன்றிய அரசு 9 மாதங்களில் வெளியிட வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது” என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *