10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், 117 முறை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி வகிக்கும் நரேந்திர மோடி ஒரே ஒருமுறை கூட செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தில்லை. பிரதமர் ஏன் செய்தியாளர்களைச் சந்திக்க வில்லை என்ற கேள்விக்கும் பதில் அளித்ததில்லை. குகைக்குள் பதுங்கியதாக, வானில் பறந்ததாக, நீரில் மூழ்கியதாகச் சகலவிதமான சாகசப் படங்களையும் வெளியிடும் வீரர் (!?) செய்தியாளர்களைச் சந்திக்கப் பயப்படலாமா?