வாலாஜாப்பேட்டை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

Viduthalai
1 Min Read

அரசியல்

இராணிப்பேட்டை, அக்.3- 30.9.2023 அன்று காலை 11 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக் கத்தை விளக்கியும், ஆற்றவேண்டிய கடமை களையும் எடுத்துரைத்தார்.

கழக காப்பாளர் பு.எல்லப்பன், மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு, மாவட்டச் செயலாளர்  செ.கோபி, மாவட்டத் துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் த.க.ப.புக ழேந்தி, மாவட்டச்செயலாளர் ந.இராமு, ஆர்.இராசா, காவேரிப்பாக்கம் பாண்டுரங்கன், வாலாஜாபேட்டை இரா.தமிழ்வாணன், சத் துவாச்சாரி த.அன்பு , மாவட்ட மாணவர்கழக தலைவர் லோ.அறிவுமணி ஆகியோர்  கருத்துரை வழங்கினார்கள். 

6 ஆம்தேதி தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா!

சமூகநீதியின் சரித்திர நாயகர்மாண்புமிகு, மானமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு நடைபெறும் பாராட்டுவிழாவில் பங்கேற்பது எனவும், 

பிஜேபி அரசின் குலத்தொழில் கல்வி திட்டத்தின் ஆபத்தினை விளக்கி பரப்புரை பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று 27.10.2023 அன்று வாலாஜாப்பேட்டை நகரில் எழுச்சியோடு நடத்துவது எனவும் தீர் மானிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *