கல்லை விண்மீன்கள் மாத இதழ் – முதல் படைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்

viduthalai
1 Min Read

கள்ளக்குறிச்சி பிப். 25- கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் தயாரிக்கப் பட்ட கல்லை விண்மீன்கள் மாத இதழ் முதல் படைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளிக் கல்வி துறை சார்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களின் தனித்திறமைகளை வெளிப் படுத்தும் வகையில் “கல்லை விண் மீன்கள்” எனும் மாத இதழ் தொடங் கப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் இதழ் தயாரிப்புப் பணி நடைப் பெற்றது. இவ்விதழில், மாணவர் கள் மற்றும் ஆசிரியர்களின் கவிதை, கட்டுரை, கதை, ஓவியம், நாடகம்,அறிவியல், பொதுஅறிவு போன்ற பல்வேறு படைப்புகள் இடம் பெற்றுள்ளன. கல்லை விண்மீன்கள் மாத இதழ் முதல் படைப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இதழ் தயாரிப்பில் பங்குப்பெற்ற அனை வருக்கும் பாராட்டுச் சான்றிதழ் களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் முனைவர்.இரா.முருகன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜோதிமணி, லதா மற்றும் துரை ராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *