நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடல்

viduthalai
1 Min Read

நீலமலை, பிப். 25- நீலமலை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 11.2.2024 அன்று மாலை மருத்துவர் கவுத மன் இல்லத்தில் நடைபெற்றது.
பழனி தலைமை தாங்கினார். மலர் முன்னிலை விகித்தார். மருத் துவர் கவுதமன் சிறப்புரையாற் றினார். இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்.
22.1.2024 அன்று நம்மையெல் லாம் மீளாத் துயரில் ஆழ்த்திய திராவிடர் கழக பெருந்தொண்டர், பெரியாரின் மாணவர், இயக்க பெருந்தூண் – பெரியாரை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த, பெரியாரை உயிர் மூச்சா கக் கொண்டிருந்த எங்கள் அன்புக் குரியவரான சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், அவருக்கு வீர வணக்கத்தையும் செலுத்துகிறது.

2.2.2024 அன்று நகர மன்ற தலைவர், திராவிடர் கொள்கைப் பற்றாளர் ஷீலா கேத்ரின் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்து டன் பதிவு செய்கிறோம். அவருக்கு இந்தக் கூட்டம் 5 நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்துகிறது.

மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்தும், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும், ‘திராவிட மாடல்’ ஆட்சியை இந்தியா முழுவதிலும் கொண்டு சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செய்லபடுவதென இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
நீலமலை மாவட்டத்திற்கு புதி தாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட் டச் செயலாளர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
நீலமலை மாவட்டச் செயலா ளர் ஜீவாவுக்கு சால்வை அணி வித்து சிறப்பு செய்யப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளராக முருகன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கப் பட்டது. அவருக்கு சால்வை அணி வித்து சிறப்பு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்: மு.நாகேந்திரன், வாசு தேவன், தினகரன், இராவணன், மூர்த்தி, இராம்குமார், சுந்தரி, சத் தியநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது. இறுதியாக இராவணன் நன்றியுரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *