தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

1 Min Read

அரசியல்

வழக்குரைஞர் சிகரம் செந்தில்நாதன் “குடியரசுத் தலைவர், ஆளுநர் – அதிகாரங்கள்” எனும் தலைப்பில், தான் எழுதிய புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிகரம் செந்தில்நாதன், வி.சுந்தரமூர்த்தி இருவரும், கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவுக்காக தொகுத்த 32 கட்டுரைகள் அடங்கிய, “கவிஞர் தமிழ் ஒளி படைப்பாக்கம்” எனும் புத்தகத்தை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (பெரியார் திடல், 2.10.2023)

– – – – – 

வ.ம. வேலவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு அரையாண்டு விடுதலை சந்தா தொகையான 1000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (1-10-2023, பெரியார் திடல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *