போக்குவரத்து கழகங்களுக்கு புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேர்வு அமைச்சர் சிவசங்கர்

1 Min Read

சென்னை,பிப்.25 – தமிழ்நாட்டில் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப் பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் 22.2.2024 அன்று உறுப்பினர்கள் எழுப் பிய கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது:-
கரோனா காலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதற்கு கரோனா பரவல் மட்டும் காரணம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் போதிய ஓட்டு நர்கள், நடத்துநர்கள் இல்லாமல் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன.

தற்போது அரசு விரைவு போக்கு வரத்து கழகத்துக்கு புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு எழுத்துத் தேர்வு முடிவு பெற்றுள்ளது. நேர்காண லும் முடிந்துள்ளது. அவர்கள் விரை வில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
அடுத்ததாக மற்ற போக்குவரத்து கழகங்களுக்கும் ஓட்டுநர்கள், நடத்து நர்களை பணிக்கு எடுப்பதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய ஓட்டுநர்கள், நடத்து நர்கள் பணிக்கு எடுக்கப்பட்டு நிறுத்தப் பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந் துகள் இயக்கப்படும்.

-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *