முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமிக்கு வீரவணக்கம்

1 Min Read

பெரியார் பெருந்தொண்டரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான மயிலாடு துறையை அடுத்த கொக்கூர் கோவிந்தசாமி (வயது 102) வயது மூப்பின் காரணமாக இன்று காலை (25.2.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அந்த பகுதியில் நீண்ட காலமாக இயக்கத்தை வளர்த்தெடுத்த பண்பாளர் – சுயமரியாதை இயக்க வீரர் ஆவார். குத்தாலத்தில் 22.8.2022 அன்று அவரின் நூற்றாண்டு விழாவில் நானும் பங்கேற்று மகிழ்ந்தேன்.

அவரை இழந்து வாடும் மகன்கள் இளங்கோவன், மணிவண்ணன், இளஞ்சேரன் மற்றும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
25.2.2024

குறிப்பு: அவரது உடல் நாளை (26.2.2024) மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *