படத்திறப்பு

1 Min Read

ஆந்திரா – விசாகப்பட்டினத்தில்
இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர்
ஜெயகோபால் நினைவேந்தல் – படத்திறப்பு
கழகப் பொதுச் செயலாளர்
வீ.அன்புராஜ் பங்கேற்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் 7.2.2024 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்வு 25.2.2024 (ஞாயிறு) அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறு கிறது. அந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கலந்துகொண்டு நினை வேந்தல் உரையாற்றுகிறார்.
நினைவேந்தல் நிகழ்வினையொட்டி டாக்டர் ஜெயகோபால் அவர்களது சமுதாயப் பணி, திராவிடர் கழகத்துடனான தொடர்பு பற்றி கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையின் ஒளி – ஒலிப் பதிவு அந்த நிகழ்வில் இடம் பெற உள்ளது.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஜெ.ரவி, 15-609 சித்தார்த் நகர் காவல் நிலையம் அருகில், அறிலோவா, விசாகப்பட்டினம் – 530 040. செல்பேசி: 98660 78486.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *