கன்னியாகுமரியில் பெரியார் புத்தகநிலையம் சார்பாக அனைத்து கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள்

1 Min Read

நாகர்கோயில், பிப். 24- தந்தை பெரியா ருடைய கருத்துகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துக்கூறும் வகை யில் நாகர்கோவில் பெரியார் புத் தக நிலையம் சார்பாக கன்னியா குமரியில் அனைத்து கிராமப்புறங் களிலும் பெரியார் நூல்கள் திட் டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பாபு ஆலோசனை வழங்கினார். அதன் பெயரில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஞாலம், தடிக்காரங்கோணம் ஊராட்சிகள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றி யம் தேரேகால்புதூர் ஊராட்சி, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் குமரன்குடி, கண்ணனூர், அருவிக் கரை ஊராட்சிகள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் தூத்தூர், மங்காடு, சூழால், மெதுகும்மல் ஊராட்சிகளிலும் தந்தை பெரியா ருடைய நூல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இராஜாக்கமங் கலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளம் துறை ஊராட்சி மன்றத்தில் நாகர்கோவில் பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர்
கோ.வெற்றிவேந்தன் ஊராட்சி மன்ற தலைவர் பி. ஆன்டனி அவர்களை சந்தித்து பெரியார் நூல்களை வழங்கினார். தொடர்ந்து அனைத்து கிரா மங்களிலும் பெரியாருடைய நூல்கள் பரப்புரை பணி நடை பெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *