அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார் முத்தூர் சா.பெருமாள்சாமி அவர்கள் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்!

1 Min Read

தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார் திரு.முத்தூர் சா.பெருமாள்சாமி (கவுண்டர்) அவர்கள் தனது 94 ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக நேற்று (23-2-2024) காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
தனது தந்தையார் மறைவுச் செய்தி அறிந்த பின்புகூட, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பொது நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கவோ, மற்றவர்கள் ‘‘நிகழ்ச்சியை நாங்கள் நடத்திக் கொள்கிறோம்” என்று சொன்ன நிலையிலும், அதனை ஏற்காது – சென்று கடமையாற்றிய பிறகே தனது இல்லம் சென்றது – திராவிடர் இயக்கத்தவர்களின் நெஞ்சுரத்திற்கும், கடமை உணர்வுக்கும் அரிய எடுத்துக்காட்டாகும்.
தந்தையாரை இழந்து துயருறும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அப்பகுதி கொள்கை உறவுகளுக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
24-2-2024 

குறிப்பு: இன்று (24-2-2024) காலை கழகத் தலைவர் ஆசிரியர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *