வழிகாட்டும் தமிழ்நாடு சென்னை அரசு பொது மருத்துவமனையில் குஜராத் மாநில 60 மருத்துவர்கள் பார்வையிட்டனர்

2 Min Read

மருத்துவ முறைகளை கேட்டு அறிந்தனர்

அரசியல்

சென்னை, அக். 4  குஜராத் மாநி லத்தில் இருந்து வந்த 60 மருத் துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். 

இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மற்ற மாநி லங்களில் தனியார் மருத் துவமனைகளில் இருக்கும் வசதி தமிழ்நாட்டில் அரசு மருத்துவ மனையில் செயல்பட்டு வருகிறது. 

குறிப்பாக ரோபோடிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை உள்ளிட்டவை தமிழ்நாட்டில்தான் முதன்முறை யாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அண்டை மாநிலம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து இலவச சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் அரசு சார்பில் மருத்துவத் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் மருத்துவப் பயிற்சிக்காக மற்ற மாநிலத்தில் மாணவர்கள் வந்து பயின்று பயிற்சியை நிறைவு செய்கின்றனர். அதுமட்டுமின்றி மற்ற மாநில சுகாதார அமைச்சர்கள் அவ்வப் போது தமிழக மருத்துவக்கட்ட மைப்பை ஆய்வு செய்து வருகின் றனர். அந்த வகையில், நேற்று (3.10.2023) குஜராத் மாநிலத்தில் இருந்து 60 மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத் துவமனையின் மருத்துவ கட்ட மைப்பு மற்றும் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். 

இதுதொடர்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறிய தாவது: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக குஜராத் மாநிலத்தில் இருந்து 60 மருத்துவர்கள் வந்தனர். அவர்கள் குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் மய்யம், முழு உடல் பரிசோதனை மய்யம், மார்பக சிகிச்சை பிரிவு, இதயவியல் சிகிச்சை பிரிவு என 10க்கும் மேற்பட்ட துறைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி இந்த மருத்துவ கட்டமைப்பு குறித்தும், வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவ கட்டமைப்பை அவர்களுடைய மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத் தலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *