தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.23 மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த 12.2.2024 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மறைந்த மேனாள் ஆளுநர் பாத்திமா பீவி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மற்றும் மறைந்த மேனாள் உறுப்பினர்களுக்கு பேரவையில்13-ஆம் தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன் மொழிந்த 2 அரசினர் தனி தீர்மானங்கள் 14-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் 15-ஆம் தேதி பதிலுரை அளித்தார். பொது பட்ஜெட் 19-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் 20ஆ-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 21-ஆம் தேதி நடந்தது. அதற்கு அமைச் சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர் செல்வம் நேற்று (22.2.2024) பதில் அளித்தனர்.

புதிதாக மாநில நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு மருத்துவமன்றம் அமைப்பது ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக புதிய சட்டம் உருவாக்குவது உள்ளிட்ட 14 சட்ட மசோ தாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, பேரவையை ஒத்திவைப்பதற்காக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர் மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட் டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவ தாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *