நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில், மனுதர்மத்தைப் போற்றும் வகையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து அம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதும், மனுதர்மத்தைப் போற்றும் அவ் வாசகம் நீக்கப்பட்டுள்ளது. செயலாற்றிய தோழர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் நமது பாராட்டுகள்!