என்று தொலையும் இந்த ஆன்லைன் வர்த்தகம்? மேலும் ஒரு அரசு ஊழியர் தற்கொலை

1 Min Read

நெல்லை,பிப்.23- ஆன்லைன் வர்த்தகத்தில் பண இழப்பு ஏற்பட் டதால் திருநெல்வேலியில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற் கொலை செய்துகொண்டார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். உள்ளாட்சி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இத் இணையருக்கு ஒரு மகள் உள்ளார். கண்ணன் கடந்த 16 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாராம். பின்னர் அவர், வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித் தனர். இந்நிலையில், ரெட்டி யார்பட்டி மலையடிவாரப் பகுதியில் அவர் விஷம் குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது.
காவல்துறையினர் அவரது சட லத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கண்ணன் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வர்த் தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் பண இழப்பு ஏற்பட்டு கடன் சுமை அதிகரித்ததால் இந்த முடிவைத் தேடிக்கொண்டதும் தெரியவந்தது. மேலும், அவரது சட்டைப் பையில் இருந்த கடிதத் தில், எனது சாவிற்கு யாரும் கார ணம் இல்லை; கடன்சுமை எனக்கு அதிகமுள்ளது என குறிப்பிட்டி ருந்ததாக காவல்துறை வட் டாரங்கள் தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *