ஆண்டிபட்டி கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் குருதிக்கொடை முகாம்

2 Min Read

அரசியல்

ஆண்டிப்பட்டி, அக். 4 – ஆண்டிபட்டி நகர திராவிடர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கொள்கை திருவிழா – அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 145ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக - தொடர்ந்து நன்றி பாராத தொண்டாக 22ஆம் ஆண்டு மாபெரும் குருதிக்கொடை முகாம் (1.10.2023) நடைபெற்றது. ஆண்டிபட்டி பொதுமக்கள் இம் முகாமை வரவேற்று பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.

தேனி மாவட்டத் தலைவர் ம.சுருளி ராசு தலைமையில், தேனி மாவட்டத் துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன் தொடர் முயற்சியில் குருதிக் கொடை முகாம் ஒருங்கிணைக் கப்பட்டது.

கம்பம் மாவட்டக் காப்பா ளர் கருப்புச்சட்டை நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்  பெரிய குளம் மு. அன்புக்கரசன், மதுரை மாவட்ட கழகம் அ. மன்னர் மன்னன், நகர கழகத் தோழர்கள் இரா. ஆண்டிச்சாமி, அன்னக் கொடி ஆகியோர் முன்னிலை வகித் தனர். செ.கண்ணன் வரவேற்றார்.

ஆண்டிபட்டி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராசன் குருதிக்கொடை முகாமை துவக்கி வைத்தார். மு.விவேக், ஆ.தனுசு, சு.கார்த்தி, கா.மணிகண்டன், நாதன் ஆகி யோர் முதலில் குருதிக்கொடை வழங்கினார்கள். விழாவில் இந் தியன் வங்கி மேலாளர் ரெ. சுந் தரராஜ பெருமாள்  பெண்களுக் கான முகாமை துவக்கி வைத் தார்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

திமுக கிழக்கு ஒன்றிய செய லாளர் பெ. ராஜாராம், ஆண்டி பட்டி பேரூர் மன்ற தலைவர் பொன். சந்திரகலா , மாவட்ட திமுக பிரதிநிதி ந. பொன்னுத் துரை , மாநில திமுக நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஆ. ராமசாமி, திமுக பேரூர் செய லாளர் பா. சரவணன், திமுக அவைத் தலைவர் அ. சேட் பரமேஸ்வரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ப. சரவணன், 

முகாம் புரவலர்கள் : பி.கே. கே. சம்பத், இரா. மருது,செ.இராம்குமார், க.பூதராஜ், மா. சுரேஷ் (கே.எம்.எஸ் டெக்ஸ்).

மக்கள் தொடர்பாளர்கள் : 

தேனி மனிதநேய காப்பகம் மா.பால்பாண்டியன், உலக அமைதி  குழு பொதுச்செயலாளர்  தேனி இரா. ஜெயபாலன்.

குருதிக்கொடை வழங்கியவர்கள்: 

தேவாரம் தேனி இளைய ஜமீன்தார் ந. விஜயன்,மரு.கி. ராஜ்குமார், மரு.வீ.ஜெய் கணேஷ், கம்பம் எல்அய்சி முகவர் அ. பரமன், உசிலம்பட்டி பேராசிரியர் அய். சந்திரகுமார், போடி பா.குமார் முதல் நிலைக் காவலர் மற்றும் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 இம்முகாம் மூலமாக 70 யூனிட் குருதி சேகரிக்கப்பட்டு தேனி அரசு குருதி வங்கிக்கு நன் கொடையாக வழங்கப்பட்டது.

குருதி வங்கி பொறுப்பாளர்  மருத்துவர் பிரியா  மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *